
சற்றே மாறிடின் மரணம் நேர்ந்திட வேண்டுமடா ;
உள்ளதிலுள்ளதை உரைத்திட
உறுதி வேண்டுமடா ;
உதட்டினில் உதிரும் வார்த்தையது
தெள்ளத் தெளிவுடன் உண்மையது வேண்டுமடா ;
கள்ளமது கனவிலும்
கலந்திராதிருத்தல் வேண்டுமடா ;
காண்பது யாவிலும்
காதலது பெருகிட வேண்டுமடா ;
துன்பத்திலும் துவளாது நெஞ்சம்
துணிவது மலையென வேண்டுமடா ;
அஞ்சுதல் அவனின்றி வேறில்லை
மிஞ்சுவோரை வீழ்த்திட வீரமிகு தோள் வேண்டுமடா ;
கொல்லத்தகுந்த வார்த்தையினை
சொல்லாதிருத்தல் வேண்டுமடா ;
மெல்லத் திறக்கும் பூவிதழாய்
மெய் ஞானமது அகத்தினில் வேண்டுமடா ;
காலத்தால் கற்பது யாவும்
நின் கருணையால் தாங்கி நிற்க வேண்டுமடா ;
மாயத்தால் மனம் காயமடைந்திடாது
நின் மயக்கத்தில் எப்பொழுதும் மதி ஆடிட வேண்டுமடா ;
கடும் நோயுற்று நொந்திங்கு வெந்திடாது
நிதம் வாய் விட்டு நின் நாமம் பாடிட வேண்டுமடா ;
சுடர் ஒளி யதனை நெற்றித் திலகமெனயிட்டு
இப்புவி தனை யான் சுற்றி வர வேண்டுமடா ;
யாதொரு நாள் சாவே என் விழிமுன் நின்றாடினாலும்
கெஞ்சுதலாகது நின் சரணம் பற்றிட திறம் வேண்டுமடா ;
யாவரும் போல் அல்லாது வையத்தில் அழியா எழுத்தாய்
என்றும் வாழ்வாங்கு வாழ நீ அருளிட வேண்டுமடா ;
உடல் கரைந்தே
உயிர் தோய்ந்தே
காற்றாகிப் போகையில்
வேறெங்கும் கலந்திடாது
வேராக உனைப் பற்றி நேராக
நின் குழல் வழி பிறந்திட வேண்டுமடா ;
கண்ணா..
- வித்யாசன்
கலந்திராதிருத்தல் வேண்டுமடா ;
காண்பது யாவிலும்
காதலது பெருகிட வேண்டுமடா ;
துன்பத்திலும் துவளாது நெஞ்சம்
துணிவது மலையென வேண்டுமடா ;
அஞ்சுதல் அவனின்றி வேறில்லை
மிஞ்சுவோரை வீழ்த்திட வீரமிகு தோள் வேண்டுமடா ;
கொல்லத்தகுந்த வார்த்தையினை
சொல்லாதிருத்தல் வேண்டுமடா ;
மெல்லத் திறக்கும் பூவிதழாய்
மெய் ஞானமது அகத்தினில் வேண்டுமடா ;
காலத்தால் கற்பது யாவும்
நின் கருணையால் தாங்கி நிற்க வேண்டுமடா ;
மாயத்தால் மனம் காயமடைந்திடாது
நின் மயக்கத்தில் எப்பொழுதும் மதி ஆடிட வேண்டுமடா ;
கடும் நோயுற்று நொந்திங்கு வெந்திடாது
நிதம் வாய் விட்டு நின் நாமம் பாடிட வேண்டுமடா ;
சுடர் ஒளி யதனை நெற்றித் திலகமெனயிட்டு
இப்புவி தனை யான் சுற்றி வர வேண்டுமடா ;
யாதொரு நாள் சாவே என் விழிமுன் நின்றாடினாலும்
கெஞ்சுதலாகது நின் சரணம் பற்றிட திறம் வேண்டுமடா ;
யாவரும் போல் அல்லாது வையத்தில் அழியா எழுத்தாய்
என்றும் வாழ்வாங்கு வாழ நீ அருளிட வேண்டுமடா ;
உடல் கரைந்தே
உயிர் தோய்ந்தே
காற்றாகிப் போகையில்
வேறெங்கும் கலந்திடாது
வேராக உனைப் பற்றி நேராக
நின் குழல் வழி பிறந்திட வேண்டுமடா ;
கண்ணா..
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக