ஞாயிறு, 26 ஜூலை, 2015

கண்ணா...

எனைக் கண்டுகொள்ள யாருமில்லையடா கண்ணா
கண்ணிரண்டில் கண்ணீர் பொங்குதடா கண்ணா
எண்ணி எண்ணி மனம் ஏங்குதடா கண்ணா
எங்கு காணினும் நீயே எனை ஆளுகிறாய் கண்ணா ;

முப்பொழுதும் புலம்புகிறேன் மனமிறங்கவில்லையா
புல்லாங்குழல் துளையாய் எனை பாவித்தல் முறையா
அழும் விழிகளுக்கு ஆறுதலில்லையா
ஆயர்பாடி மாதவா நான் உனதடிமையில்லையா ;

கண்ணா.....

நாளும் தொழுதிட நம்பினேன் நீ எனக்கில்லையா
நாயகன் எனக்கென்றே உனைப் பற்றினேன் மெய்யில்லையா
ஊர் கூறும் பழி சொல்லில் உனக்கும் பங்கில்லையா
ஊமை என் உதட்டினில் உறுதியளித்தாய் நியாபகமில்லையா ;

கண்ணா....

வாழ்வெல்லாம் சேவகம் செய்திட வழியில்லையா
வாவென அழைத்திட வாமனனுக்கு வாய் வரவில்லையா
தேவையில்லையென தள்ளிவிட யான் ஏனைய பொருளோ
நின் மார்பினில் சேர்ந்திருக்கும் உயிர் மாலையில்லையோ ;

கண்ணா....

கொஞ்சிடும் நேரம் குறைத்து நெடுவென கெஞ்சவிடுதல் ஞாயமோ
அஞ்சியே நாளும் நானிருக்க அபயக் குரலெழுப்பலாகுமோ
பூசிய மஞ்சள் முகமது கனலாகி சிவந்திடத் தாங்குமோ
வீசு தென்றலாய் மஞ்சத்தில் பேசிய வார்த்தையது மாயமோ ;

கண்ணா....

என்ன குற்றமது யான் செய்தாலும் அதுபொறுத்து
முன்னம் வினைகள் முடிந்திட மோட்சமளித்து
விண்ணும் மண்ணும் விளங்கிட எம் கை கோர்த்து
விடியும் அடையும் பொழுதெல்லாம் என் வினாவிற்கு விடை தருவாய் ;

மயிற்பீலி மாழகனே
மங்கையின் மெய் காதலனே ;

கண்ணா...

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக