வருவான் காத்திரு
உண்மையின் கண் மூடட்டும்
ஊமையின் மெய் மூடட்டும்
நன்மையின் ஒளி மூடட்டும்
நம்பிக்கையின் கை மூடட்டும்
நாளும் தொழுபவன் முகம் மூடட்டும்
நெஞ்சே சற்றும் கலங்காதே
பொய்மையை சுட்டெரிக்கும்
மூன்றாம் கண் விழிக்கும்
அது வரை பொறுத்திரு
முக்கண்ணன் வருவான் காத்திரு ~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக