
ஆதி முதல்வனே
மோட்ச வழியனே
நீதி மொழியனே
யாவும் ஆனவனே
மாயை அறிந்தவனே
ஆணவம் அழிப்பவனே
ஞானம் அளிப்பவனே
வானமாகி நிறைந்தோனே
நல் கானமாடும் நடராஜனே
பிறை மதி சூடிய சடையனே
துயர் நீக்கிடும் தூயனே
நான் பயன் என்ன செய்தேனோ சங்கரனே
நின் பாதம் சரண் புகுந்து எனை மெய் மறந்தே சாம்பலாய் ஆவேனே ~~~
- வித்யாசன்