வியாழன், 4 ஜூன், 2015

சீ.. - நீ

அகல விரித்து இதழ் நீட்டி
பூப்பெய்ததை காற்றினில் பறைசாற்றி
வண்டினை மகரந்தப் பொடியினில் குளிப்பாட்டி
காரணம் நானல்ல என ஏளனம்பூட்டி
மாலையில் வாடி மீண்டும் காலையில்
வா என அழைக்கும் பெரும் போதை கூட்டி
பெயரை தொலைத்த பூ ஒன்று
மெல்லென தலையாட்டி
காம்பினை மறைத்ததென்ன
ஆசையற்றவளா
ச் சீ.. சீ.. - நீ
பாலைவன பனிக்கட்டி ~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக