வியாழன், 4 ஜூன், 2015

ஞானமே

நெஞ்சிலே தெளிவும்
சொல்லிலே வலுவும்
கண்ணிலே கனிவும்
கசடு அழிந்த நல் நினைவும்
உள்ளத்தில் பேரன்பும்

உண்மையில் உறுதியும்
மனக் குளத்தினில் குழப்பம்
ஆகாயத்தாமரை என மறைத்திடாது
ஆதவன் விழிப் பார்வையில் மலர்ந்திருக்கும்
மலரென எமை விரிந்திருக்கச் செய்வாய் ஞானமே ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக