காரிருள் கலைந்திட்டு பேரொளி கனிந்த ஞாயிற்றே
நினைவு யாவிலும் திண்ணமாய் ஞான ஒளி பரவிடச் செய்வாய்
தானென ஆணவம் முழுதாய் சுட்டெரித்தே
ஆனது யாவிலும் நின் அருளென ஆனந்தம் அடையச் செய்வாய்
வீணெனப் பொழுதுகள் வீழ்ந்திங்கு கழிந்திடாது
வீணை நாதமாய் எமை மீட்டி நல் கானம் பூட்டி களிப்படையச் செய்வாய்
காலமே தின்றென்னை கரைத்திடாது
என்றும் மங்காது எங்கும் நிறைந்திடச் செய்வாய் ஞாலமே ~~~
நினைவு யாவிலும் திண்ணமாய் ஞான ஒளி பரவிடச் செய்வாய்
தானென ஆணவம் முழுதாய் சுட்டெரித்தே
ஆனது யாவிலும் நின் அருளென ஆனந்தம் அடையச் செய்வாய்
வீணெனப் பொழுதுகள் வீழ்ந்திங்கு கழிந்திடாது
வீணை நாதமாய் எமை மீட்டி நல் கானம் பூட்டி களிப்படையச் செய்வாய்
காலமே தின்றென்னை கரைத்திடாது
என்றும் மங்காது எங்கும் நிறைந்திடச் செய்வாய் ஞாலமே ~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக