வியாழன், 4 ஜூன், 2015

நெற்றித் திலகம்

பெரும் சுடரினை நெற்றித் திலகமெனயிட்டு
எழும் பேராசையினை புன்னகையில் புதையிட்டு
நல் ஞான ஒளியதனை நின் திருமுகத்தில் படரவிட்டு
மேன்மையது மெய்யது நின் நாமம் உரைத்திட்டு
வீழும் ஆவியதனை பொய்யற்று நிரை பொருளிட்டு
யாவிலும் பற்றற்று நின் பாதமே எப்பொழுதும் பற்றிட்டு
கெட்டொழியும் தீயதோர் நினைவினை விலக்கிட்டு
முற்றும் நீயென என்பதனை முழுதாய் உணர்திட்டு
விடியும் ஒவ்வொரு காலையிலும் சுடர் விளக்காய் என்னில் எரிந்திட்டு
சூட்சமங்களின் மாயையை சுகமென அனுகாதிருக்கவிட்டு
ஆதி சக்தியே நின் அடிதொழும் மலரென எனை ஏற்றிட்டு
அடியனை துன்பம் பீடிக்காது காத்திடுவாய்
செங்கதிரவனாய் மன வானெங்கும் நிறைந்து அருளிடுவாய்
அன்னை பராசக்தியே என்னில் ஒளிர்ந்திடுவாய்

ஓம்.... ஓம்.... ஓம்....

-வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக