தீதென்னைத் தீண்டிடாது
கந்தவேல் நிதம் காத்திடும்
நோய்மை வந்தென்னை நெருங்கிடாது
முருகன் நாமம் மருந்திடும்
கந்தவேல் நிதம் காத்திடும்

முருகன் நாமம் மருந்திடும்
ஆணவம் அண்டிடாது
ஆண்டியன் அடியது அருளிடும்
வேண்டியது தந்திட மாமயிலோன்
மனமது உடனே இறங்கிடும்
ஆசைப் பற்றது அற்றிட
ஆறுமுகனின் பன்னிரு விழியது சுட்டிடும்
நேசமது நிறைந்திட
நெற்றிப் பிறந்தோனை உள்ளமது ஆழத் தழுவிட விளைந்திடும்
போகமது மோகமது நீங்கிட
ஓம் எனும் மந்திரத்தை ஓதிட அது ஓடிடும்
வடிவேலன் அழகன் எழில் மேனிதனைக் கண்டால்
தனை மறந்து தமிழ் காதல் கொண்டிடும்
ஓம்... ஓம்... ஓம்...
- வித்யாசன்ன
ஆண்டியன் அடியது அருளிடும்
வேண்டியது தந்திட மாமயிலோன்
மனமது உடனே இறங்கிடும்
ஆசைப் பற்றது அற்றிட
ஆறுமுகனின் பன்னிரு விழியது சுட்டிடும்
நேசமது நிறைந்திட
நெற்றிப் பிறந்தோனை உள்ளமது ஆழத் தழுவிட விளைந்திடும்
போகமது மோகமது நீங்கிட
ஓம் எனும் மந்திரத்தை ஓதிட அது ஓடிடும்
வடிவேலன் அழகன் எழில் மேனிதனைக் கண்டால்
தனை மறந்து தமிழ் காதல் கொண்டிடும்
ஓம்... ஓம்... ஓம்...
- வித்யாசன்ன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக