
எண்ணங்களின் ஒளிச் சிதறலில் மின்னிக் கொண்டிருக்கும் விழிகளிடம் இமைகள் முளைப்பதில்லை
இருளைத் துளைக்கும் மெல்லிய புள்ளிகளின் வளைவு நெளிவு கோலத்தின் விரல் முத்தம் நிசப்தமாய்
அந்தரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடும் மழைத்துளியின் மன்மதப் பார்வையில் மயங்கும் ஈரத்தை எப்படி உணர
வாடா வண்ண மலரெடுத்து சாய்ந்திடா மார்மீது மாலை சூடி வெட்கத்தில் வீதியெல்லாம் சிவந்ததென்ன
கோடிக்கணக்கான கண்கள் வேடிக்கை பார்க்கையில்
கோவில் திருவிழாவில் ஜோடியாய் நீயிருந்து
தனித்திருக்கும் என்னை கேலி செய்யும் காரணம் என்ன
ம்...ம்...
- வித்யாசன்
வாடா வண்ண மலரெடுத்து சாய்ந்திடா மார்மீது மாலை சூடி வெட்கத்தில் வீதியெல்லாம் சிவந்ததென்ன
கோடிக்கணக்கான கண்கள் வேடிக்கை பார்க்கையில்
கோவில் திருவிழாவில் ஜோடியாய் நீயிருந்து
தனித்திருக்கும் என்னை கேலி செய்யும் காரணம் என்ன
ம்...ம்...
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக