வியாழன், 4 ஜூன், 2015

ஆழ உழுதினை

நல் காலப் பொழுதினை
ஆழ உழுதினை செய்து
அங்கே நாம் அன்பை விதைப்போம் ;

பேதமற்ற நீர் ஊற்றி
உறவெனும் உரமேற்றி
நம்பிக்கை வேரிட்டு இலை நீட்டுவோம் ;

உண்மையின் கிளை விட்டு
உரிமையின் உயரம் தொட்டு
நாளைய மரமாவோம் ;

பேராசைப் புயல் காற்று
பெயர்த்திட வரினும் அசையாது
அடை மழையின் குடையாவோம் ;

நம்மினத்தவர் வந்திங்கு
கனியுண்டு இளைப்பாற
நம்மாலான நிழலும் கொடுப்போம் ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக