
ஆழ உழுதினை செய்து
அங்கே நாம் அன்பை விதைப்போம் ;
பேதமற்ற நீர் ஊற்றி
உறவெனும் உரமேற்றி
நம்பிக்கை வேரிட்டு இலை நீட்டுவோம் ;
உண்மையின் கிளை விட்டு
உரிமையின் உயரம் தொட்டு
நாளைய மரமாவோம் ;
பேராசைப் புயல் காற்று
பெயர்த்திட வரினும் அசையாது
அடை மழையின் குடையாவோம் ;
நம்மினத்தவர் வந்திங்கு
கனியுண்டு இளைப்பாற
நம்மாலான நிழலும் கொடுப்போம் ~~~
- வித்யாசன்
உரிமையின் உயரம் தொட்டு
நாளைய மரமாவோம் ;
பேராசைப் புயல் காற்று
பெயர்த்திட வரினும் அசையாது
அடை மழையின் குடையாவோம் ;
நம்மினத்தவர் வந்திங்கு
கனியுண்டு இளைப்பாற
நம்மாலான நிழலும் கொடுப்போம் ~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக