வியாழன், 28 ஜனவரி, 2016

அழகனே... முருகனே....

சேவற் கொடியோனே
நல் செய்தியது தருவோனே

காலன் அழிப்போனே
பெரும் காதல் கொள்வோனே


எண்ணக் கொடியதை வதைப்போனே
மாயப் பிடியினை அறுப்போனே

வேலதனில் வெல்வோனே
வேத நாயகனே

முத்தமிழ் ஆறுமுகனே
வித்தையில் தகப்பனே

பழம் வேண்டிய ஆண்டியே
ஞான பலம் தேடிய பழநியே

சினம் கொண்ட சுவாமியே
எம் சிந்தை யாவும் நீ நிரம்பியே

வண்ண மயில் மீது மனமிறங்கியே
வள்ளி,தெய்வானையுடன் காட்சி நேரில் தந்தாயே

தலை வணங்கினேன் அய்யனே
எங்கள் தலைவனே தென் தமிழ் கடவுளே

அழகனே...
முருகனே....


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக