வியாழன், 28 ஜனவரி, 2016

மழைத் துளி

கடல் மீது விழும் மழைத் துளி
அது போல் கலந்தேனே இல்லை இடைவெளி ;
மன அலை மீது ஆடும் சிறு கொடி
கரை தாண்டி வந்தேனே நின் விருப்பப்படி ;
சிறு பிழை தாங்கா பருவக் கிளி

சிறை நீங்கி வானம் பறந்ததடி ;

மெல்ல உலாவும் நிலாவும் நம் வழி நெடுக உடன் வருவதென்ன ;
சொல்லக் கேட்காத நம் உரையாடலை நிழல் தொடர்ந்து பதிவதென்ன ;
இருள் ஒளியினிலே....
இமை அழகினிலே....
இன்னும் ஓர் கனாவின் காட்சி நினைவாவோம் ;

முகம் பார்த்து பேச
இரு விழியும் ஒருசேர அலைவதென்ன ;
விரல் கோர்த்து தனி உலகில் நடந்திடவே அடம் பிடிப்பதென்ன ;
மயக்கத்தின் மடியினிலே விடிகிறதே...
தயக்கத்தின் முடிவினிலே ஆசை பிறக்கிறதே...
பிரியாத ப்ரியம் ஒவ்வொன்றாய் நாம் செய்வோம்~~~

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக