வியாழன், 28 ஜனவரி, 2016

பேரின்பமம்மா


இன்னும் எத்தனை காலமம்மா
என்ற ஏக்கத்தில் காத்திருக்கலாமா ;
இன்னும் பக்கத்தில் நீ வாம்மா
நின் முகம் பார்த்தல் பேரின்பமம்மா ;

சற்று தூரமும் சோகமம்மா - எனில்
விட்டுப் பிரிவதென்றால் உள்ளம் தாங்கிடுமா ;
உன் மீது நேசம் வைத்தேன் பைத்தியமா
நீ அதை வேசம் என்றால் நெஞ்சம் சகித்திடுமா ;

தொட்டால் கோபம் வருமா
(உனை...)
வேண்டாமென எனைத் தட்டி விடுதல் நியாயமா
சுட்டாலும் தங்கம் மாறுமா
(தீயில்...)
என் சுடர் நிலவே நீ யில்லாது இந்த வான் வீணம்மா ;

சிறு குற்றம் செய்தலால் ஊடல் பிறக்கலாமா
அது சட்டெனத் தீராது பனை யென வளரலாமா
விட்டெனை மறந்திடு எனக் கூறலாமா ( நீ... )
அதை விட நின் விரலினில் நல் விஷம் தந்திடம்மா ;

முட்டாளாய் எனை நீ எண்ணலாமா
உனை வேரெவரும் பங்கிட விடுவேனாமா
கட்டாயம் கைவிட லாகாதம்மா
என் காதல் வீழ்ந்தாலும் உதிக்கும் செங்கதிரம்மா ;

இன்னும் எத்தனை காலமம்மா
என்ற ஏக்கத்தில் காத்திடலாமா
இன்னும் பக்கத்தில் நீ வாம்மா
நின் முகம் பார்த்தல் பேரின்பமம்மா~~~

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக