வியாழன், 28 ஜனவரி, 2016

இன்னுயிர் நீத்தேன்


பெரும் நேசம் வைத்தேன்
அது சிறு பேதமையால் சிதறுவது கண்டே
நெஞ்சம் துடித்தேன் ;

தீரா ஆசை வளர்த்தேன்
அத்தணல் தீர்ந்திங்கு சாம்பலாவது கண்டே
சித்தம் தவித்தேன் ;

ஓயா அலையென அன்பது சமைத்தேன்
அஃதிங்கே ஓய்ந்து ஒதுங்குவது கண்டே
உள்ளம் பதைத்தேன் ;

மாயா நினைவதனை மனமெங்கும் சுமந்தேன்
ஆக யிறுதியலது மறந்திங்கு மாய்வது கண்ட பின்னே இன்னுயிர் நீத்தேன்~~~

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக