வியாழன், 28 ஜனவரி, 2016

சுதந்திரம் இல்லை~~~


பதினாறு வயதுக்கு முன் பாலியல் பலாத்காரம் குற்றமில்லை

சிவப்பு விளக்கில் அமரும் விட்டில் பூச்சிகள் சாவதில்லை

கழிவறைக்குச் சென்றவள் மலம் வெளியேறும் வரை கற்பு நீடிப்பதில்லை

மாதவிடாய் வலியில் பிசுபிசுக்கும் ரத்தம் தீட்டாகையில் தேகம் சுத்தமில்லை

பேருந்து பயணமும் பலாத்காரமும் நிச்சயம் வேறில்லை

உடல் போக பாத்திரமாக புற்றாய் பாம்புகள் நெளிய இரவுகளின் கதறல் கேட்பதில்லை

கணினி யுகத்திலும் பெண் சிசு கரு கலைப்பு குறையவில்லை

உறுப்புகளை கூறு போட்டு விற்கும் கூட்டத்திற்கு வேலியே துணை

இன்னும் பல கொடுமைகளை வெளியில் சொல்ல முடியவில்லை

ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் பெண்களுக்கு முழு சுதந்திரம் இல்லை~~~

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக