வியாழன், 28 ஜனவரி, 2016

சகியே


நேசம் பேசுதடி சகியே
அது நேரம் பாராது தூக்கம் கெடுக்குதடி சகியே ;

மோசம் செய்வாரடி சகியே
அவர் பகல் வேசக் காரரடி சகியே ;


நிதம் ஆசை வளர்ப்பாரடி சகியே
அதில் அளவுண்டு என்றென்னை அழ வைப்பாரடி சகியே ;

தேவதை என்பாரடி சகியே
தேன் குடித்ததும் மறந்திடா வண்டென்பாரடி சகியே ;

பெரும் பாசம் வைப்பாரடி சகியே
அது பழுதாகின் பொய் கோவம் கொள்வாரடி சகியே ;

என் சுவாசம் என்பாரடி சகியே
சொன்ன சொல் யாவும் இன்று ஏன் மறந்தாரடி சகியே ;

அதன் காரணம் கேட்டிடுடி சகியே
என் காதல் பரி பூரணமடி சகியே~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக