வியாழன், 28 ஜனவரி, 2016

கண்ணம்மா...


உண்மைக் காதல் மாறுவதுண்டோ
கண்ணம்மா....
அது காரண, காரியம் தேடுவதுண்டோ ;

இதற் கிங்கு வேறெதும் நிகருண்டோ
கண்ணம்மா...
நீ வேரன ஆனபின்
வேறென ஆவதுண்டோ ;

என் சித்தத்தில் வேறு எண்ணமுண்டோ
கண்ணம்மா...
பாயும் ரத்தமதற்கு ஓய்வுண்டோ
அது நின்னதன்றோ ;

விழி பார்த்திடும் யாவிலும் பேதமுண்டோ
கண்ணம்மா...
காணும் காட்சிகள் எதனிலும்
நின் உருவமன்றோ ;

எழும் சப்தத்தில் பிரிவேதுமுண்டோ
கண்ணம்மா...
நான் கேட்கும் ஒலி யத்தனையும்
நின் மொழியன்றோ ;

விண்ணகத்தில் சொர்க்கமுண்டோ
கண்ணம்மா...
நானறிவேன் அது மெய்யில்லை
என் பக்கத்தில் நீயருக்க அது உண்மை யன்றோ ;

நீ என் முழு சக்தியின் மூச்சன்றோ
கண்ணம்மா...
நீ இல்லை என்றால் நான் மூர்ச்சையன்றோ~~~

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக