வெள்ளி, 11 செப்டம்பர், 2015

தகுமோ நல்லிரவே

மாறா நேசம் வைத்தேன் வெண்ணிலவே
மோசம் செய்திடலாமோ என் நிலவே
உனைத் தேடி வந்தேன் தேவ நிலவே
நீ தேய்ந்திடலாமோ தேன் நிலவே
பேசாமல் கொல்வதேன் பேரழகு நிலவே
பேரொளி வீசி மயக்குவதென்ன பேரன்பு நிலவே
நான் பாவமல்லவா பால் நிலவே
என் மேல் கோபம் என்ன சொல் நிலவே
தள்ளி தள்ளிப் போவதென்ன தங்க நிலவே
நாமிருவர் தனிமையில் இருப்பது தகுமோ நல்லிரவே ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக