
நாளெல்லாம் விதைத்தாயடி
துன்பம் கை பிடித்தாயடி தோழி தவிக்காது
அதை துணிவுடன் எதிர்த்தாயடி
கண்ணீர் கதை படித்தாயடி தோழி அது யாவும்
புறந்தள்ளி வாடாப் பூவென சிரித்தயாடி
செந்நீர் நிதம் வடித்தாயடி தோழி துயர் அள்ளி
கார் குழலில் முடிந்தாயடி
தன்னந்தனி நின்றே தவித்தாயடி தோழி பிறர்
தயவேதுமின்றி முன்னே எட்டு வைத்தாயடி
மெய் நேசம் தேடித் துடித்தாயடி தோழி யாவரும்
பொய்யென்ற போதும் கட்டி அனைத்தாயடி
கன்னம் கனக்க அழுதாயடி தோழி உனக்கெனச்
சின்ன உள்ளம் இருப்பதை ஏன் மறந்தாயடி
நின் எண்ணம் நான் அறிவேனடி தோழி
நீ கண் மூடி சாய்ந்திட என்றும் என் தோள் உள்ளதடி ~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக