வெள்ளி, 11 செப்டம்பர், 2015

யாரும் பிறப்பதுண்டா


யாரும் பிறப்பதுண்டா
இனி உன்போல் யாரும் பிறப்பதுண்டா
இம்மண்ணை உயிரென நேசிக்க
பிறரை தன்போல் பாவிக்க
யாரும் பிறப்பதுண்டா

இனி உன்போல் யாரும் பிறப்பதுண்டா...

கடல் அலைபோல் என்றும் ஓயாது கண்ணில் தூக்கமில்லாது கடமை செய்தானிவன் ;
ஏழை என்று பாராது
இங்கு யாவரும் சமம் என்று நாளும் வாழ்ந்தானிவன் ;
மாலை மரியாதை விரும்பாது
பட்டம் பதவிக்கு மயங்காது நம்மில் பாமரனாய் இருந்தானிவன் ;

யாரும் பிறப்பதுண்டா
இனி உன்போல் யாரும் பிறப்பதுண்டா ....

எட்டுத்திக்கும் தமிழ் சுடர் ஏற்றி
விஞ்ஞானம் வியக்க ஏவுகணை பூட்டி
அயல்நாட்டை அன்பால் வென்றானிவன் ;
தனக்கேதும் வேண்டாம் என்று
தலைக்கணம் துளியுமின்று
தமிழ் நாட்டிற்காக உழைத்தானிவன் ;
இனபேதமின்று மதம் ஒன்றென்று உரக்க உரைத்தானிவன்
ஈன்ற தாயைவிட பெரிதாக தம் தாய்நாட்டை மதித்தானிவன் ;

யாரும் பிறப்பதுண்டா
இனி யாரும் உன்போல் பிறப்பதுண்டா ....

அன்பே சிறப்பென்று
அதன்முன் யாவும் சிறிதென்று
அக்னி சிறகொன்று விரித்தானிவன் ;
அறிவே கல்வி என்று
குழந்தையே கோவில் என்று
அனுதினமும் அதனைத் தேடிச் சென்றானிவன் ;
உண்மையில்லை அரசியலில் என்ற வாக்கினை பொய்யாக்கி நேர்மையாகி நின்றானிவன் ;

யாரும் பிறப்பதுண்டா
இனி உன்போல் யாரும் பிறப்பதுண்டா ....

எங்கும் விவசாயம் பொங்கும்
நாளை யாவர் துயர் நீங்கும்
நம்பிக்கை விதைத்தானிவன் ;
கண்கள் விழித்து கனவு காணுங்கள்
எதிர்காலம் நம் விரல்கள் என நம்புங்கள் என்று
புதுப் பாடம் சொன்னானிவன் ;
என்றும் முடியாது என்றிருந்திடாது எழுந்து ஓட சக்தி தந்தானிவன் ;

யாரும் பிறப்பதுண்டா
இனி உன்போல் யாரும் பிறப்பதுண்டா ....

நல்லொரு பாதை வகுத்து
நடந்தின்று நாங்கள்
செல்லும்போது
துணையென இல்லாது எங்கே போனானிவன் ;
கனவு பலித்தது என்று
நற் காலம் பிறந்தது என்று
கதவு திறக்க கண்கள் மூடி மௌனமானானிவன் ;
கண்ணீர் பெருக்கெடுக்க
காலன் வந்துனை அழைக்க
எங்கள் தலை மகனே மனம் தாங்காது தூங்கினானிவன் ;

யாரும் பிறப்பதுண்டா
இனி யாரும் உன்போல் பிறப்பதுண்டா ....

ஏங்கித் தவிக்கின்றோம் எழுந்து வாரும் ஐய்யா
நீர் கண்ட கனவினை நினைவாக்குகின்றோம் தோள் கொடும் ஐய்யா
இனி நீ இல்லாது வாடும் நெஞ்சத்திற்கு ஒருமுறை ஆறுதல் கூறும் ஐய்யா
உன்போல் ஆலமரம் சாய்ந்தால் விழுதுகள் நிற்குமா ஐய்யா
காலம் முழுவதும் கை தொழுதிட நீ கடவுள்தான் ஐய்யா
மீண்டும் நீ பிறப்பதாயின் நாங்கள் யாவரும் எங்கள் உயிரைத் தருகிறோம் ஐய்யா ;

யாரும் பிறப்பதுண்டா
இனி உன்போல் நல்லோர் இம்மண்ணில் யாரும் பிறப்பதுண்டா ...


கலாம் அவர்களுக்கு நமது கண்ணீர் அஞ்சலி....

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக