வெள்ளி, 11 செப்டம்பர், 2015

இறைவன்

நாம் ஆபத்தையும், கடும் துயரையும் சந்திக்க நேரிடுகையில் ஆண்டவனை அழைக்கின்றோம், அவனது அடி விழுகின்றோம், அபயக்குரல் எழுப்புகின்றோம் .....

ஏன்....

இறைவன் அடுத்த நிமிடம் ஓடி வருவான் என்றா ?

ஆறுதல் தருவான் என்றா ?
அடைக்கலம் அளிப்பான் என்றா ?
கண்ணீர் துடைப்பான் என்றா ?
கதவு திறப்பான் என்றா ?

இல்லை....

எந்த ஒரு எதிர் பார்ப்பிலும் அவன் அடங்கியிருப்பதில்லை. பிறகு ஏன் அழைக்கின்றோம் ...

எது நேர்ந்தபோதும் நமக்கு துணையாக நிற்பான் , தோள் கொடுப்பான், தனியென தவிக்கவிடாது பக்கத்தில் பாரம் சுமப்பான், இவைவிட யாரும் நமக்கில்லை என்கின்ற கவலை தீர்க்கும் அருமருந்தாவான் அவரவர் இறைவன் ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக