
ஏன்....
இறைவன் அடுத்த நிமிடம் ஓடி வருவான் என்றா ?
ஆறுதல் தருவான் என்றா ?
அடைக்கலம் அளிப்பான் என்றா ?
கண்ணீர் துடைப்பான் என்றா ?
கதவு திறப்பான் என்றா ?
இல்லை....
எந்த ஒரு எதிர் பார்ப்பிலும் அவன் அடங்கியிருப்பதில்லை. பிறகு ஏன் அழைக்கின்றோம் ...
எது நேர்ந்தபோதும் நமக்கு துணையாக நிற்பான் , தோள் கொடுப்பான், தனியென தவிக்கவிடாது பக்கத்தில் பாரம் சுமப்பான், இவைவிட யாரும் நமக்கில்லை என்கின்ற கவலை தீர்க்கும் அருமருந்தாவான் அவரவர் இறைவன் ~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக