
இடையில் யாவும் மாயையே
இனிப்பில் துவங்கி கசப்பில் முடியும்
வாழ்க்கை என்பதே துயரமே
எது எது எனது....
ஏதுமில்லை
அது நிதம் உணர்ந்தால் துன்பமில்லை
போவதும் வருவதும் கணக்குப் பார்த்தால்
நினைவு நிம்மதி அடைவதில்லை
நடப்பது யாவும் நம் கையில் இல்லை
நாடக மேடையில் நாம் யாவரும் பொம்மை
போதும் ... போதும் ... என்றே சொல் - உயிர்
விட்டுப் பிரிந்தால் உடல் வெறும் மண் ~~~
- வித்யாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக