வெள்ளி, 11 செப்டம்பர், 2015

காதல் செய்தலே பாவமா

காலை பொழுதினிலே
காக்கை கரைகையிலே
நீர் பாயும் ஆற்றங்கரையினிலே
நீராட வந்தேனடி .... கண்ணம்மா
நீ அங்கு இல்லையடி
மனம் பாலையாய் ஆனதடி ...

தென்றல் பாட்டுப் படிக்கையிலே
தென்னை கேட்டு தலை அசைக்கையிலே
கூட்டுப் பறவைகள் விண்ணில் பறக்கையிலே
கண்கள் தேடுதடி... கண்ணம்மா
நின் முகம் காட்ட மறுப்பதென்னடி
என் முகம் கண்ணீராகுதடி....

நேற்று நிகழ்ந்தவை நினைக்கையிலே
உயிர் கூட்டுக்கிளி கொத்தி ரசிக்கையிலே
தனிப் பாட்டு ஒன்று பிறக்கையிலே
அதைப் பாடி நின்றே எனை மறக்கையிலே... கண்ணமா
நீ ஓடி வந்து ஆடியதேன் சொல்லடி
இதயம் தனத் தானத் தந்தா சந்தம் போடுதடி...

காலம் கூட்டிக் கழித்துப் பார்க்கையிலே
காதல் கட்டை விரலில் புதுக் கோலம் போடுகையிலே
காட்டுத் தீயென ஆசைப் பற்றி எரிகையிலே.... கண்ணம்மா
நீ கள்வனென மறைதல் ஞாயமா
உண்மைக் காதல் செய்தலே பாவமா ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக