வெள்ளி, 11 செப்டம்பர், 2015

வா வா கண்ணா

வா வா கண்ணா
வண்ண மயில் மன்னா
தா தா கண்ணா
தங்க முத்தம் எண்ணா ;

கண் பார்வையாலே சிரிப்பாய்
காந்தமெனக் கவ்வி ஈர்ப்பாய்
ஆயர்குலம் மண் புசிப்பாய்
ஆவென்றால் உலகம் அளப்பாய் ;

குறும்பாலே ஊர்வம்பு இழுப்பாய்
உரலில் கட்டிவைத்தால் அதை உருட்டி விளையாடி மகிழ்வாய்
கோபியர் ஜடை பிடித்து இழுப்பாய்
கோபம் கொண்டு அடிக்க வந்தால் காற்றாய் ஓடிடுவாய் ;

குமரிகள் குளத்தினில் குளிக்க ஆடை கொய்திடுவாய்
கண்டது கை கூப்பிக் கெஞ்சினால் மறுகணமே தந்திடுவாய்
உறியினில் கட்டிவைத்திருக்கும் வெண்ணெய் ருசிப்பாய்
யாரேனும் திருடன் என்றுரைத்தால் இல்லையென்று மறுப்பாய் ;

புல்லாங்குழல் இசைத்து நெஞ்சுருக அழைப்பாய்
பொல்லாத காதல் மயக்கங்கள் தந்து வில்லாக வளைப்பாய்
யாருமில்லாத தருணத்தில் கனி யிதழ் சுவைப்பாய்
நின் பேரன்பு எழிலில் யாவரையும் ராதையாக்கி ஏங்கவைப்பாய் ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக