வெள்ளி, 11 செப்டம்பர், 2015

கிருஷ்ணா வா வா வா

ஆயர்குல அழகனே வா வா
ஆசை தீர அனைக்கவே வா வா
மனக்காயங்கள் ஆற்றிட வா வா
மயிலிறகால் நீவிட மாதவா வா வா வா.....

குழல் ஓசையிலே குழப்பங்கள் தீர்க்க வா வா
நான் கொஞ்சிட குழந்தையாக வா வா
நடுக்கமது நீங்கிட நந்த கோபாலா வா வா
நாளும் உனை நம்பினேன் நாராயணா வா வா வா...

மயக்கமது தந்திடும் மாயவனே வா வா
நல் மாலையது சூடிக்கொள்ள மதுசூதனனே வா வா
வானமது அளந்த வாமனனே வா வா
வாயில் தின்பண்டமென அண்டம் மென்ற அன்பனே வா வா வா ...

கோபம் கொண்ட கோபியரைத் தேட வைக்கும் கோபாலனே வா வா
கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் வாசுதேவா வா வா
வெண்ணெய் திருடனென்று சொல்பவரை வாழ வைக்கும் ரமணா வா வா
கண்ணில் கன்னியரை கரைத்திடும் காதலனே வா வா வா...

எண்ணி எண்ணி தவிக்கின்றேன் ஏகாந்தனே வா வா
எல்லையில்லா பேரன்பு கொண்டேன் யசோதையின் மைந்தனே வா வா
சிறு கலக்கமது வந்தபோது காத்திடுவாய் கண்ணா வா வா
நின்னை கை தொழுது வணங்கினேன் என் முன்னே கீதை உரைத்திட கிருஷ்ணா வா வா வா ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக