திங்கள், 18 ஏப்ரல், 2016

நெற்றிக்கண்

காலகதி கையிலில்லை வாழ்வதுவோ யவர் வசமில்லை சாவது அறிந்தும் ஆசை சரியாது விரிந்திட கழிக்கும் ஆணவ மலத்திற்கோ காவலில்லை

பெரு ஞானமதை சூன்யம் துளிவற்றி தெளிவற்று குடித்திட பிறர் துதி பாடி வீங்கும் தொப்புள் வளைவதுவாய் நியாயம் ஆகிட

இடுவதும் பெறுவதும் யாவும் பிச்சையென ஆகையில் இச் சகத்தினில் நற்செயல் புரிவோர் நானறியேன்


பெரும் பசி நேர்கையில் ஊறும் எறும்பதனை கோடிட்டு கொல்லும் அற்பமாகையில் யான்

#எவன் குற்றமுற்றவனென நெற்றிக்கண் திறக்க~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக