திங்கள், 18 ஏப்ரல், 2016

அவ்வளவு சுலபமல்ல

அவ்வளவு சுலபமல்ல
தீப்பிடித்தெரியும் ஞாபகங்களில் பிடில் பிடித்து வாசிப்பது...


அத்தனை எளிதல்ல
பெரும் மணி ஓசை கேள்விக்கு தேர்க்காலில் சிரம் பதிலாவது...


யாவிலும் ஒற்றை பொய்யல்ல
நேர்பட வாழ்தலில் யாவுமிழந்தும் இடுகாட்டில் கூலியாக தாளி தெரிவது...


இது நிகழ்தல் சிறிதல்ல
படர்கொடிக்கு இடர்நேரிடாது ரதம் கொடுத்து பாதி வழியில் பாதம் நடந்திட பாரியாவது...


இவ்வளவு கருணை காண்பது எளிதல்ல
குருதி பொங்கும் பசிக்கு தன் பங்கென தொடை அறுத்து தராசு நிறுத்தும் சிபியாவது...


இத்தனை வாஞ்சை இயல்பல்ல
நடனமில்லை கடுங்குளிரில் நடுங்கிடும் தோகையென போர்வை கண்ட பேகன் ஒருவன் பேரன்பானது....


எவர் நீதியும் மாறுவதல்ல
பெரும் சபை நடுவே உண்மை இடியென முழங்கிடவே சிதறிய சிலம்பொலியினில் உண்மை மன்னன் மடிவது~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக