திங்கள், 18 ஏப்ரல், 2016

கண்ணா...

உள்ளம் காற்றில் ஆடும் பூவாய் ஆடுதடா
கண்ணா...


உன்னைக் காணும் கண்ணிமைகள் ஊஞ்சலாய் ஆடுதடா

சொல்லச் சொல்ல இன்பம் கூடுதடா
கண்ணா...


உந்தன் பெயரை உச்சரிக்க எந்தன் நெஞ்சில் ஆவல் கூடுதடா

காணும் காட்சி யாவிலும் நிந்தன் உருவம் தோன்றுதடா
கண்ணா...


எங்கும் நானிருக்க என்னில் பாதி நீயிருக்க தோன்றுதடா

உன்னை எண்ணி பூ பறிக்க மயிலிறகாய் ஆகுதடா
கண்ணா...


அதை அள்ளி சூடி நீ மணக்க கூந்தல் கருநாகம் ஆகுதடா

புல்லாங்குழலெடுத்து நீ இசைக்க நெஞ்சம் புது மோகம் கொள்ளுதடா
கண்ணா...


சிறு புல்லிடைவெளி நீ பிரிந்தாலும் சோகம் உயிர் கொல்லுதடா

மாயம் யாவும் செய்தபோதும்
கண் கலங்க துள்ளி ஆடி வருவாயடா
கண்ணா...


என் மானம் வேண்டி கை உயர்த்த காக்க ஓடி வருவாயடா

இவ்வுலகில் இருப்பதெல்லாம் மிகு சிறிதாக மாறுதடா
கண்ணா...


நின் மீதுள்ள பெரும் காதல் ஏதாகினும் ஒருபோதும் மாறாதடா

‪#‎கண்ணா‬~~~

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக