திங்கள், 18 ஏப்ரல், 2016

ஆண்டவனைக் கண்டீரோ?

நெருப்பு மூட்ட துணிந்த உங்கள் கரங்களுக்கு முத்தத்தை பரிசாக்குகிறோம்
மூத்திரம் ஊற்றிக் கொடுத்த உங்கள் கோத்திரங்கள் மட்டுமே உயர்வென்போம்
ஆத்திரமூண்டு அடித்துதைத்த போதினிலும் நோகும் உங்கள் பாதங்களை பிடித்திடுவோம்
பார்ப்பனர், பள்ளர், பறையரென பார்த்த போதிலும் பேதமற்று உங்களை தொழுவோம்
ஆயினும் நீங்களோ
எங்களை தலித்தென தள்ளிவைத்தீர்
சொல்லில் முள் தைத்தீர்
கண்ணில் நீர் வரவைத்தீர்
காலமெல்லாம் இழித்தே காரி உமிழ்ந்தீர்
அத்தனையும் செய்தீர்
பின் ஆலயம் சென்றீர்
ஆண்டவனைக் கண்டீரோ?
எக் குளத்திலும் முங்கினாலும்
எம் குலத்திற்கு நீர் செய்த அழுக்கது நீங்குமோ ?
பிறப்பென்பது ஒரு வழியானபின்
சிறப்பென்பது இனத்தால், மதத்தால் வேறுபடுமோ ?
நினைத்தால் நெஞ்சு கண் மூடுமோ~~~

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக