திங்கள், 18 ஏப்ரல், 2016

கண்ணீர்...

வெறுமை நிறைந்த இருளொன்றில் தன் திசை திரும்பா பறவையின் கூடொன்று குலுங்கி அழுததின் சத்தத்தில் உதிர்ந்தது சருகல்ல கண்ணீர்...

கனல் எரிக்கும் ஓர் கோடையில் தனதான இரை தேடுகையில் வழிமாறி தனல் சாலையில் கருகிட வெந்தது எறும்பல்ல வியர்வை...

கொடும் மழையில் தவமிருந்த சிறு செடியின் மீது விழுந்த மழைத்துளியில் கழுத்துடைந்து தலை கவிழ்ந்திட நிகழந்தது பேதமல்ல சிறு மோதல்...

பெரும் பலம் உண்டென பிளிறும் ஓசையின் பாசையில் கரைபுரண்டு ஓடுவது வீரமல்ல தலை தூற்றும் புழுதி மண்~~~

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக