திங்கள், 18 ஏப்ரல், 2016

சுடலை மாடன்

விறகு வீடதனில் விரைப்பு கூடு ஏதுமற்று நீட்டி
கோட்டான் விழிக்க தீ மூட்டி
அனல் சூட்டில் நரம்புயர்த்தி மீண்டெழ இயலாது
அதிலழியா ஆசை நெஞ்சதனை தணல் பொசுக்க
மயங்கியது யாவும் மங்கி மண்டை ஓடு குருடாகி
சிவந்தே கரும் புகை பூசி எஞ்சிய எலும்பும் அடையாள மிழந்து
கரித்துகளாகிய ஒரு பிடி சாம்பலின்
சர்வமுமாய் இவ்வுலகினை ஆள்கிறான் ஜடா முடியுடைய எம் சுடலை மாடன்~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக