திங்கள், 18 ஏப்ரல், 2016

எங்கள் பாரதம்

எங்கும் இன்பம் பாயுதடா
அதில் எண்ணம் மூழ்கி நீந்துதடா
துன்பம் யாவும் தீர்ந்ததடா
தூய ஒளி நெஞ்சில் வீசுதடா


நன்மை செய்ய நாம் ஒன்று கூடுவோமே
நாடு வளம் பெற நிதம் பாடு படுவோமே
உண்மை ஒன்றே பேசுவோமே
பொய்யரை கொன்றே ஏசுவோமே


யாவரும் அன்பை போற்றுவோமே
மேலவர் கீழவர் வேற்றுமை நீக்குவோமே
காவலர் இன்றி பெண்டீர் வாழ்ந்திட்டோமே
எங்கள் உயர் பாவலர் சொல்லாய் ஆனோமே


ஆண்டவன் அடிமை இல்லாது செய்தோமே
இங்கு யாவரும் சம்மென உறுதி செய்வோமே
மேன்மைகள் நிறைய நல் ஞானம் அடைவோமே
மேலென யவருமில்லை இதை நாம் உணர்வோமே


வாழ்வெல்லாம் யாவர்க்கும் பகிர்ந்திளிப்போமே
மிகு ஏழைகள் இங்கில்லை என்று பறை அடிப்போமே
சாவது உண்டென்பதை நெஞ்சில் வைப்போமே
அதற்குள் பேதமை இல்லாது பெரும் நேசம் வளர்ப்போமே


பாரெங்கும் மங்கா பாசம் விதைப்போமே
பாவையர் எண்ணம் சிறக்க பாதை வகுப்போமே
பாமரன் ஆளும் அரசமைப்போமே
எங்கள் பாரதம் காக்க இன்னுயிர் கொடுப்போமே~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக