திங்கள், 18 ஏப்ரல், 2016

ஆட்டு மந்தையென

சிந்தை யாவும் ஆட்டு மந்தையென திரிகிறது
அது வந்த வழி பள்ளமென்று அறிந்த பின்னும் மதி அவ்வழி செல்கிறது
அதனாலான துன்பம் பல நேரிட்டும் அதுவே விருப்பம் என்கிறது
கொன்று போட திறனின்றி ஆசை கூடவே வருகிறது
ஆக...
வெந்த பின்னும் சாம்பல் வருந்தவியலா செயலாகிறது
திருந்திடா
நிந்திக்கவியலா வாழ்வானதை யான் எங்கனம் நொந்து கொள்வது
எண்ணமே என் தவறிழைத்தேன்
நல் ஞானமே எனை நெருங்கிடா
நீ விலகிடக் காரணம் ஏது ?


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக