திங்கள், 18 ஏப்ரல், 2016

நம்பிக்கையின் வானமெங்கும்

என் நம்பிக்கையின் வானமெங்கும்
நீ நட்சத்திரமாய் ஒளி சிந்திட அதனடியில் அமர்ந்தபடி நம் ஞாபகங்களை புள்ளியாக்கி விளையாடுகின்றேன் ;


தூரங்களின் இடையில் தொற்றிக் கொண்டிருக்கும் வார்த்தைகளை தூதாக அனுப்பிட
நானதை மடியினில் தூக்கிவைத்து முத்தமிட்டுக் கொஞ்சுகின்றேன் ;


விரல் தீண்டிய உஷ்ண நினைவுகளை மாரோடு அனைத்தபடி கண் மூடிட
நீயோ பூவற்ற காம்பினில் புல்லாங்குழல் இசைக்கிறாய் ;


பார்ப்பாரற்ற பாத வெள்ளிக் கொலுசு மணி அகற்றிய இரவினில்
நீ என் கனவினில் வந்து இடைவிடாது சலங்கை கட்டி ஆடுகிறாய் ;


நீயோ காத்திருப்பின் கடைசி கட்டத்தில் சுழன்று கொண்டிருக்கின்றாய்
நானோ காதல் சதுரங்கத்தில் தனித்தபடி தாயமாக வீழ்ந்து கிடக்கின்றேன் ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக