திங்கள், 18 ஏப்ரல், 2016

பிறப்பெதற்களித்தாய்

பிறர் வலி வாங்கிடலாகாது அவர்தம் துயரம் நீக்கிட இயலாது
வெறும் வார்த்தையிலே வாழுமிந்த

பிறப்பெதற்களித்தாய்

உயிர் யாவும் ஓரென படைத்து பின்னதில் உருவம் பல வடித்தே அதற்குள் ஏன் பிரிவெனும் உயர்வளித்தாய்

ஓர்நாள் அனைத்தும் மரித்தே மண்ணாகும் என்பதை வகுத்தும் மனமதனில் தீரா ஆசைதனை அழியாதேன் நிதம் வளர்த்தாய்

இங்கெதும் நிலைக்கும் சக்தியற்றதெனும் உண்மைதனை மறைத்தே காலமே எனை உனக்குள் மீளா சிறைவைத்தாய்

அதை நினைத்தே சற்று நகைத்தே கடந்திட
கற்பதில் இங்கேதும் புதிதில்லை காண்பது யாவும் கானலென்று சத்தியம் உரைத்தாய்~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக