திங்கள், 18 ஏப்ரல், 2016

காரணமற்றவளா பாஞ்சாலி

தாமரைத் தடாகம் தவறிட
"ஐ "வரின் தலைவி நகைத்திட
அவமானம் சதுரங்கத்தில் அமர
அடமானத்தில் தாலி சுழல
வந்தமர் தொடை மீதென
அரங்கினில் ஆடை அவிழ
ஆரணிய வாசம் அழைத்திட
அன்றவிழ்த்த கொண்டை
பூசி முடிந்தாள் பிளர் தொடை
பெரும் போர் பலி
காரணமற்றவளா பாஞ்சாலி ~~~


-வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக