திங்கள், 18 ஏப்ரல், 2016

பேரொளி வீசிடடி

பேரொளி வீசிடடி
உள்ள பேதமை நீக்கிடடி
பாரெங்கும் பரவசமடி
உனை பார்த்தல் பேரின்பமடி ...


வட்ட முகம் வடிவழகடி
கிட்ட வர எட்டிப் போவதேனடி
பட்டு தேகம் தேய்வதேனடி
கட்டுக் கடங்கா காதல் பிரிவோடி ...


சற்றே மேகத்தில் ஒழிந்தாயடி
கடல் தொட்டே குளிர்ந்தாயடி
விழி பட்டே உடல் மெலிந்தாயடி
எனை விட்டே ஓர் நாள் ஓடி மறைந்தாயடி...


என் ஆசை உன்போல் சிறியதடி
உன்போல் அதிரம் உருக சிரிப்பவர் யாரோடி
தூங்க இமையும் நீயோடி
உனை நீங்கா இரவும் நானோடி~~~



- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக