திங்கள், 18 ஏப்ரல், 2016

ஞாபகம்

இருள் கவ்விக்கிடக்கும் மன அறை எங்கும் அமர்ந்திருக்கும் மௌனம் நின் நினைவுப் புள்ளியாய் சுழல்கிறது ;

விழித்திருக்கும் தெருவிளக்கு வெளிச்சத்தில் இரை தேடி அலையும் நாயென பசித்திருக்கிறது நின் ஞாபகம் ;

விரல் தட்டும் கடைசி சாம்பல்

நீ அன்பளித்த ஆஷ்டிரேயில் அனாதையாய் அடக்கம் செய்யப்படுகிறது ;

மறக்கத் துடிக்கும் இதயத்தின் முயற்ச்சியில் தரை முத்தமிட்டு வீழும் நட்சத்திரமாய் நான் ;

படுக்கையில் கசங்கிக் கிடக்கும் தூக்கத்தின் சுருக்கங்களை நிமிர்த்திட எத்தனிக்க கனவின் வாசற்படியாகிறது தலையணை;

பெரும் சாபத்தால் சபிக்கப்பட்ட சாமத்தை சமைத்து காத்திருக்க ருசிக்க வாராது ஆயினும் சபிக்க வா~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக