திங்கள், 18 ஏப்ரல், 2016

மானிடா

பொழியும் சிறுநீரில் எவர் குலமும் மணப்பதில்லை
கழிக்கும் மலத்தினில் எவர் மதமும் தெரிவதில்லை
புதைக்கும் நிலத்தினில் எவர்
இனமும் முளைப்பதில்லை
எரிக்கும் நெருப்பினில் எவர்
சாதியும் பிறப்பதில்லை
பின் ஏனடா
பிரித்துப் பார்க்கிறாய்
உன்னையே நீ மானிடா~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக