திங்கள், 18 ஏப்ரல், 2016

கண்ணா...

எத்தனை முறை கேட்டாலும்
நின் முகம் காட்ட மறுத்தாயடா
கண்ணா....
என் முகம் வாடுதடா
கண்ணா....
நின் இன்முகம் காட்டிடடா
கண்ணா...
இன் முகம் காட்டிடடா....

எத்தனை முறை கேட்டாலும்
உன் பெயர் சொல்வேனடா
கண்ணா...
அத்தனை பிரியமடா
கண்ணா...
அணுவும் பிரியேனடா...

கத்தி நான் அழைக்கின்றேன்
காணாது தவிக்கின்றேன்
கட்டி எனை தழுவ வருவாயடா
கண்ணா...
நானுமுந்தன் யசோதையடா...

பட்டது போதுமடா
பற்றது தூரமடா
பற்றியெனை காக்க வருவாயடா
கண்ணா...
நானுக்கு தோழனடா...

பூவுடல் முள்ளாகுதடா
பூலோகம் தள்ளாடுதடா
விட்டு எனை நீ விலகாதடா
கண்ணா...
நீயெனக்கே காதலனடா...

சுட்டுடல் தானடா
சுகமது பொய்யேடா
சூட்சுமம் அவிழ்ப்பாயடா
கண்ணா...
மது சூதனன் நீயேடா...

பேதமை தவிர்ப்பாயடா
வேதனை தீர்ப்பாயடா
நல் கீதை நீ உரைப்பாயடா
கண்ணா...
நீயெந்தன் கண்ணனடா...

கிருஷ்ணா...
நானுந்தன் ராதையடா...


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக