திங்கள், 18 ஏப்ரல், 2016

மங்கையர் தின

மண்ணில் மா தவம் செய்தாலும் மாதராய் பிறக்கு மின்பம் கிட்டிடுமோ
இவ்வையகத்தில் வேரென ஆன இவளுக்கிணை வேரொன்று உண்டோ
வீதிக்கொரு ஆலயமதில் மூலவருண்டு கருவறை சுமக்கும் கடவுள் இவளன்றோ
பாதகம் செய்திங்கு நாளும் பார்ப்போர்க்கும் சாதகமாய் துணை நிற்கும் ஆயுதம்
வேண்டுதல் ஏதுமற்று வேண்டுவன கேட்கு முன் கொண்டு ஓடோடி வரும் ஆலயம்
நாடாளும் வீரரும், பாராளும் பாவலரும் யாராயினும் பரிபூரணமாய் காப்பவள் பெண்~~~

மகளிர் அனைவருக்கும் மங்கையர் தின நல் வாழ்த்துக்கள்

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக