சனி, 7 நவம்பர், 2015

ஆயர்பாடி அழகா

ஆயர்பாடி அழகா
மாயம் புரியும் மாதவா
பிருந்தாவனம் தேடுகிறது வா வா...

கங்கை கரை மன்னா
காதல் கள்வன் கண்ணா
கோகுலம் அழைக்கிறது வா வா....

நின் புன்னகை கொண்டு
மனப் புண்ணதனைக் கொன்று
என் எண்ணம் மீது ஏறி நின்று குழல் ஊத வா வா~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக