சனி, 7 நவம்பர், 2015

தனல்

விழிகளுக்குள் தனல் கொதிக்கையில் உறக்கம் எப்படி உயிர்ப்பிக்கும்
பொய்களுக்கான மேடையில் உண்மை தூக்கிலிடப்பட்ட துயரம் துப்பாக்கிகளை துடைத்து வைக்கச் சொல்கிறது
நம்பிக்கை பாத்திரத்தின் ஓட்டையினில் ஒழுகிய எண்ணற்ற கண்ணீர் துளிகளில் இதுவும் ஒன்று
நியாயங்களுக்கான கோப்பையில் விசம் நிரப்பி நீதி கேட்பது விசாரணையின் விலாஎலும்பில் மதமதப்பு மட்டுமே மிஞ்சிடும்
அதிகாரத்தின் நுனியில் அவமான எழுத்துக்கள் எந்த கோப்பிலும் பதிவிடப்படுவதில்லை அது அனாதையாக ஆதாரமற்று மூடப்படுகிறது
எல்லாம் கனவாகிடும் என்ற காரணமோ என்னமோ களவுகள் காக்கப்படுகிறது அதி நுணுக்கமாய்
இன்னும் சீலையின் கேள்விகளுக்கு பலியாக காத்திருப்பது சீதைகளின் கழுத்து மட்டுமே ~~~

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக