சனி, 7 நவம்பர், 2015

கண்கள் அங்கே

கண்ணன் எங்கே
கண்கள் அங்கே
கண்டபோதே காதல் கொண்டது நெஞ்சே....

மார்கழி எங்கே
மாதவன் அங்கே
மை விழியாளிவள் மயங்குகிறாள் இங்கே...

கோடி அழகு கோபாலன் என்பேன்
நிதமும் தேடியே நிலையாய் அகலியாவேன்
பிருந்தாவனத்தில் பூக்களாய் பூப்பேன்
கங்கை நதியினில் இரு கரையாவேன்
என்னை.....
கண்ணன் வந்து கைத்தலம் பற்றும் வரை கன்னியாக காத்திருப்பேன்....

கண்ணன் எங்கே
கண்கள் அங்கே
கண்டபோதே காதல் கொண்டது நெஞ்சே....

மார்கழி எங்கே
மாதவன் அங்கே
மை விழியாளிவள் மயங்குகிறாள் இங்கே ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக