சனி, 7 நவம்பர், 2015

அன்பது ஊறிடுமோ

சொல்லது வலுவற்றுச் சிதறலாகுமோ
நேர்மை இல்லாது நேயம் தோய்ந்து குன்றலாகுமோ
வில் எடுத்தவரெல்லாம் வீரன் ராமனாகுமோ
வீழ்வதனால் நதி நீரது உடைந்து உருக்குலையுமோ
ஏடெடுத்து பயில்வதனால் நினைவில் ஞானம் ஏறுமோ

வண்டு துளையிட்ட யாவும் புல்லாங்குழல் ஆகுமோ
நல் விசமுள்ள நாகமது தீண்டினால் நன்மை விளையுமோ
நாம் நம்புவோர் என்றும் நமக்குரியர் என்றாகிடுமோ
சில்லறை இல்லாதோரை கல்லறைதான் சேர்த்திடுமோ
சீரது நாளும் பாரினில் நிகழ்ந்தால் சிறுமை நெருங்கிடுமோ
மாதர் யாவரும் தம் உயிரென ஓம்பினால் ஒழுக்கம் ஒழுகுமோ
மெய்யது திரியா நாவினில் பொய்யது நிஜமென நின்றிடலாகுமோ
கையது கற்றது போதுமாயின் அது பெருங்கடலை கடந்திடலாகுமோ
ஐய்யமது அழிந்தே போயின் அந்நெஞ்சினில் அன்பது ஊறிடுமோ
இறப்பிங்கு இல்லாது இருப்பின் அடுத்த பிறப்பிங்கு ஆனந்தமாகுமோ ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக