சனி, 7 நவம்பர், 2015

என்ன தவம் யான் செய்தேன்

இரு புருவம் நிமிர்த்தி
வில் உயர்த்தி
விரல் அழுத்தி
விடும் அம்பின்
அவ்வழகு கண்டு
இது போதாது போதாது
போர்க்களம் மறந்தேன்
ராமா....
என்ன தவம் யான் செய்தேன்
ராவணனாய் அவதரிக்க
நினது கரத்தால் வதம் முடிக்க~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக