சனி, 7 நவம்பர், 2015

கண்ணா....

புல்லாங்குழல் இசை கேட்குதடா
கண்ணா....
புல்லின் பனித்துளியெல்லாம் துளையாகி உன் இதழ் கேட்குதடா
கண்ணா....
பொல்லாத இரவென்னைக் கொல்லுதடா
கண்ணா...
நின் பெயர் சொல்லாது விடியும் என் பொழுதேதடா
கண்ணா....
நான் முன்னே வந்தால் கற்சிலையாகி நிற்பாயோடா
கண்ணா....
காதலை மொழிந்தாலும் கள்வனென ஒளிவாயாடா
கண்ணா...

வா.... வா....
கண்ணா...
மயிலிறகு
மன்னா....


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக