சனி, 7 நவம்பர், 2015

எங்கே கண்ணா

எங்கே கண்ணா
நீ எங்கே கண்ணா
மனம் நின் முகம் காண ஏங்குது
நீ எங்கே கண்ணா...

நெஞ்சமெனும் ஆலயத்தில் சாந்தியில்லை நீ வாராய் கண்ணா
கெஞ்சவிட்டு தள்ளி நில்லாது ஓடி வாராய் கண்ணா
மன சஞ்சலங்கள் தீர்த்து வைக்க வாராய் கண்ணா
நின் சன்னதியை சரண்டைந்தேன் பாராய் கண்ணா...

எங்கும் எதிலும் நீயே நிறைந்தாய் எந்தன் கண்ணா
என் எண்ணம் யாவிலும் கலந்தாய் நீங்கா கண்ணா
கண்ணிரண்டும் நீராகி வழியுதடா விரல் தாராய் கண்ணா
மண்ணில் இந்த பிறவி போதுமடா தீர்க்க வாராய் கண்ணா....

பொங்கும் சோகம் பொய்யாக்கிடு ராதை கண்ணா
எங்கும் ஏழை இல்லை என்றாக்கிடு யசோதை கண்ணா
அங்கமெங்கும் துடிக்கிறது அனைத்திட வாடா கண்ணா
எனக்கு நீயின்றி ஆறுதல் கூற வேறு யாறுமில்லையடா கண்ணா...

கண்ணா.... கண்ணா....
கண் திறவாய் கண்ணா...

எங்கே கண்ணா
நீ எங்கே கண்ணா
மனம் நின் முகம் காண ஏங்குது
நீ எங்கே கண்ணா ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக