சனி, 7 நவம்பர், 2015

தீ மூட்டுகிறாய்

மௌனங்களில் தீ மூட்டுகிறாய்...
வார்த்தைகள் ஒவ்வொன்றாக உடன்கட்டை ஏறுகிறது ;

உனக்காக நேந்துவிட்ட சொற்களில் ஆசை ஜடை ஜடையாய் ...
மழிப்பதற்கு இச்ஜென்மம் போதாது ;

குறுக்கு நெடுக்கு கோடுகளில் உனக்கான குடிசை கட்டிவைக்கின்றேன் ...
நீ வசிக்க வேண்டாம் வாசித்திடு கோயிலாகும் ;

நகர முடியாத சவப்பெட்டியாக எழுத்துக்கள் ஆனால் என்ன ...
நீ எப்போது திறந்து பார்த்தாலும் உயிர்ப்புடனிருக்கும் ;

ம்....
உன்னிதழுக்குத் தெரியாது உச்சரிக்கும் போதெல்லாம் எச்சில்பட்டு உடம்பெல்லாம் வெட்கத்தில் தொப்பெலாக நனையுமென்பது~~~

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக